இராமநாதபுரம் ஸ்ரீ வி.என்.நாகராஜ பாகவதர் இசைப் புலமைமிக்க சங்கீத வித்வான். நாயகி சுவாமிகளின்
ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல்கள் 35, நாமாவளிகள் 9, தமிழ் மொழிப் பாடல்கள் 9
தேர்ந்தெடுத்து ராகத்திற்கேற்ப சுரம் அமைத்து சுர சாகித்தியங்களாக்கிய பெருமையுடையவர்.
அப் பாடல்களடங்கிய நூலை ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்
கீர்த்தனைகள்(சுரசாகித்தியத்துடன்) என்னும் பெயரால் 1994.ல் கீதா நடனகோபால நாயகி
மந்திர் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் பல பெண்மணிகளுக்குச் சுவாமிகளுடைய
கீர்த்தனைகளைக்கற்றுக் கொடுத்து மேடையில் பாடும் அளவிற்கு பயிற்சியும்
கொடுத்திருக்கிறார்.மேடைக் கச்சேரிகள் மற்றும் வானொலி வாயிலாகவும் சுவாமிகளுடைய
கீர்த்தனைகளைத் தக்க ராகங்களில் பாடிப் பரப்புகின்றார். பாகவதர் அவர்களுக்கு அன்புடன்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.