| |
|
என்னகோபமோ இன்னும்
|
|
ஆனந்தபைரவி ராகம் ஆதி தாளம்
|
|
|
பல்லவி
என்னகோபமோ இன்னும் மன்னவ ஸ்ரீ கிருஷ்ணா
இரட்சிக்க நினைவில்லையோ [என்ன]
அநுபல்லவி
சொன்னோமெங்கள் துயரை என்ன செய்தாலுசரி
சின்னத்தனமுனக்கே ஸ்ரீகிருஷ்ணா [என்ன]
சரணங்கள்
முன்னமெங்கள்தமை நீகட்டியணைத் தன்பாய்
முத்தமிடவில்லையோ
என்னசெய்குவோமினி ஆசைமோகலாகிரி
எங்களைவிடவில்லையே ஸ்ரீகிருஷ்ணா [என்ன]
சிந்தாகுலமதைக் கோஇந்தா ஒழிப்பதற்கு
சித்தத்தில் கொள்ளவில்லையோ
செந்தாமரை மலர்த்தாளனே எங்களை நீ
சேரற்பாபமோ சொல்லய்யே ஸ்ரீகிருஷ்ணா [என்ன]
விடுகிலோமென்றன்றுன் திருவாக்கதனாலே
விளம்பிக் கலந்ததில்லையோ
கெடுமதியுனக்கேன்காண் படுதுன்பமதைத்தீர்க்க
கிருபை நெஞ்சினிலில்லையோ ஸ்ரீகிருஷ்ணா [என்ன]
ஏகநினைவா மோகக்கடலில் மூழ்கி
இன்பம் சுகித்ததில்லையோ
நாகமேலாடிய நடனகோபாலனென்று
நடித்தருளியதில்லையோ ஸ்ரீகிருஷ்ணா [என்ன]
|
|