| |
|
கண்ணன் எப்போது வருவானடி
|
|
புன்னாக வராளி ராகம் ரூபக தாளம்
|
|
|
கண்ணிகள்
கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம்பெறவே
நண்ணியவித்துன்பவினை நாசமதாயறவே [க]
எண்ணம் அறிந்ததுபோலே யின்பமீவானோடி--ஆ
எண்ணம் இழுத்துக்கொண்டு நம்மோடிருப்பான் கூடி [க]
எண்ணம் இங்கெங்கேயிருக்கு இருடிகேசன் மேலே
எண்ணத்தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே [க]
விண்ணவர்களுக்கமுதம் விரும்பித்தந்தானேடி
அண்ணலேடி நமக்கினிமேல் ஆரேடிபோடி [க]
அய்யன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய்யீ தறிவாய் போயழை நாமுய்வம் [க]
ஏடிவிட்டுப் போனானிங்கே என்செய்வேன் சந்திரமுகியே
போடியவனெங்கேயோ நீபோயழையென் சகியே [க]
வயிறெரியுதெங்ஙனம்போ யெவரிடத்தில் விழுவேன்
இயம்பியவார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி யழுவேன் [க]
பொய்யுரைப்பானோ உரையாய் பொன்னரங்க னென்பால்
பையரவின்மேல் நடித்த பாதனேடியன்பால் [க]
நடித்ததிருவடி பணிந்து நங்காயழைபோடி
முடித்தமுடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி [க]
கண்ணீர் ஆறாய்ப்பெருக வவன்காடாது சென்றானே
பண்ணியதவப்பயனோ பரதவிக்கின்றேனே [க]
|
|