ஆனந்தபைரவி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

கண்ணுக்குள் வைத்திருந்தானேடி
கண்ணன் எம்மைக்   [க]

அநுபல்லவி

புண்ணாய் மனம் நோகவையோ
அண்ணல் போகலாமா வுய்யோம்   [க]

சரணங்கள்

கூடிமகிழ்ந்திருந்தானேடி கண்ணன் எம்மைக் (கூடிமகிழ்ந்)
பாடியோரெல்லாம் மயங்க
ஓடிச்செல்லலாமோ மனங்கலங்க   [க]

கட்டியணைக்கும் கையனேடி அன்பாயெம்மைக் (கட்டி)
எட்டெழுத் தோதுவாருள்ளம்
கட்டுமலம்போக்கும் வள்ளல்  [க]

காக்குநற் கருணையோனேடி சேதனர்களைக் (காக்குநற்)
கோக்களை மேய்க்க வந்தானே
யார்க்குமெளிதாய்த் தந்தானே [க]

தாபம்தீர்க்கும் தண்பாதனேடி ஜெனன மரண (தாபம்)
சாபமுற்ற அலியை தன்
ஆபத்து தீர்த்தாரறிமின்  [க]

இடபங்கறந்தமாலேடி யெங்களாசையினால் (இடபங்கறந்)
புடவை சென்னிமேற்கொண்டு
யடனமாடிய விண்டு   [க]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube