பரதவிக்கவிட்டதினால்

   

உசேனி ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

பரதவிக்கவிட்டதினால் பலனென்ன மண்மேலே
முரளிகானம்செய்தே நம்மை மோகிப்பித்தமாலே [ப]

மால்செய்தேநம்மைப்பிரிந்த மா தவனெங்கேடி
கால்கள் நோவச்சென்றானே கண்ணனைத் தேடிப் போடி [ப]

ஆசையைத்தந்துளமறிய அநீதம் பண்ணலாமோடி
பூசைபுரிந்தோமே பலன் பொருந்தினதிதுவோடி [ப]

போவானென்று தெரிந்திருந்தால் போகவிடுவேனோ நீ
ஆவலுடன் தேடிப்பிடி அவதிப்படுவேனோ [ப]

மடிந்திடக்காலம் வந் ததே மடிந்தாலும் சுகமோடி
முடிந்திடவந்தானே ஜகன்மோகன னெங்கேபோடி [ப]

கம்பமற்ற காகம்போல் நான் கலங்குவேனோ தோழி
செம்பவளவாயன் தரச் சேர்வேனோசங்காழி [ப]

சங்காழிகளைப்பிடித்த சர்வலோகதேகி
இங்காழிவண்ணனை த்தர நீயே திருவாகி [ப]

அயனரனிந்திரா திகளை ஆக்கியகோபாலன்
நயனங்கள் தோறும் விளையாடும் நங்கள் பூபாலன் [ப]

நட்டாற்றில் கைவிட்டாற்போலே நம்மை செய்திட்டானே
ஒட்டாமல் திரிந்த எங்கள் உளமயக்கிவிட்டானே [ப]

மயக்கமது மென்மேலும் வளருதேடிபாவாய்
நயனங்கொண்டருளுவானோ நானென்செய்வேன் காவாய் [ப]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube