|
|
ராம ராகவா ஸீதா ராமராகவா
|
|
கல்யாணி ராகம் ஆதி தாளம்
|
|
|
பல்லவி
ராம ராகவா ஸீதா ராமராகவா
நாமோராயிர பரந்தாம சேம நல்குவாய்
அநுபல்லவி
நம்பினேன் உன்னை இவ்வம்புவியினில் செம்பொற் பாதம்
நம்பாதார்க்கின்ப மெப்படி கொடுப்பாய் [ரா]
சரணங்கள்
வந்தெனையாளாய் கோவிந்தா முகுந்தா சிந்தை நொந்தேன்
பந்தவினை எந்தனைவிட் டோடச் செய்வாய் [ராம]
காயம் நிற்குமோ செவ்வாயனே அருள் ஆயர் குலம் வந்து மாயம்
நேயமதாய் செய்த வெங்கள் [ராம]
கன்ன செய்குவேன் இதற்கென்ன செய்குவேன் முன்னம்
எண்ணிறந்த பாவம் பண்ணினேன் மன்னித்தருள்வாய் [ராம]
தேவதேவனே மூவர் முதல்வனே
கோபம் செய்தால் இங்கே எந்தன் பாவமெப்படித்துலையும்[ராம]
ஆடவருவாய் நினைந்தாடவருவாய்
கூடலழகன் எனை கூடிவாழ்வதற்கெண்ணினேன்[ராம]
ஆயரமுதமே ஆயர்வாயமுதமே
நானெனும் ஆணுவமற ஞானமோன மெனக்கருள்வாய்[ராம]
ஓடுதே நெஞ்சம் கைகூடுமோ நெஞ்சம்
மூடருனைப் பாடியாடி தேடவருவாரோ சொல் [ராம]
கெடவிடாதேகை உந்தனடி பிடித்தேன் மெய்
நடனகோபாலா உனக்கே நாயகிநான் வேறறியேன்[ராம]
|
|